எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்களுள் காலீல் கிப்ரானும்
ஒருவர். அவருடைய "குழந்தைகள்" என்னும் கவிதையின்
தமிழாக்கம் இதோ:
உங்கள் குழந்தைகள்- உங்கள் குழந்தைகளல்ல
வாழ்வின் சுய ஏக்கத்தினால் வந்தவர் அவர்கள்
உங்கள் வழியாக வந்து இருந்தாலும் -
அவர்கள் உங்களிடம் இருந்து வரவில்லை
உங்களுடன் இருந்தாலும்
அவர்கள் உங்களுக்கு சொந்தமில்லை
உங்கள் அன்பை நீங்கள் அவர்களுக்கு அளிக்கலாம்
உங்கள் எண்ணங்களையல்ல - ஏனெனில்
அவர்களுக்கு சொந்த எண்ணங்களுண்டு!
அவர்கள் உடலை நீங்கள் வீட்டில் வைக்கலாம்
அவர்கள் ஆன்மாக்களையல்ல - ஏனெனில்
அவர்கள் ஆன்மாக்கள் நாளைய வீட்டில் வசிக்கின்றன
உங்கள் கனவில் கூட நீங்கள் அங்கு செல்ல முடியாது
அவர்களைப் போல் இருக்க முயற்ச்சிக்கலாம் நீங்கள்
உங்களைப்போல் அவர்களை ஆக்கி விடாதீர்கள் - ஏனெனில்
வாழ்க்கை பின் நோக்கிப் போவதில்லை, நேற்றிலும் நிற்பதில்லை
வில்லான உங்களிடமிருந்து புறப்படும் உயிர் அம்புகள் அவர்கள்
உங்கள் அம்புகள் விரைவாகவும் வேகமாகவும் செல்ல
உங்களை வளைய வைத்து இயற்க்கை தன் இலக்கை நோக்கி
தன் பாதையில் அம்புகளை செலுத்துகிறது
அதை உணர்ந்து இயற்க்கையின் கையில்
அன்போடு வளையுங்கள் - ஏனெனில்
இயற்க்கை விரும்புவது வேகமான அம்பை மட்டுமல்ல
உறுதியான வில்லைக்கூடத்தான்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment